ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து, ஜூலை 22 அன்று சந்திரயான்-2 ஐ ஏவவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னதாக ஏவப்படாமல் நிறுத்தப்பட்ட சந்திரயான் -2 ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு ஏவப்படும் என்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வியாழக்கிழமை இன்று அறிவித்தது.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு, கடைசி நேரத்தில், இந்தியாவின் இரண்டாவதான ‘சந்திரயான் -2’ ஏவப்படுதல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
“ஜூலை 15, 2019 அன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவப்படாமல் நிறுத்தப்பட்ட சந்திரயான் -2, தற்போது மீண்டும் ஜூலை 22, 2019 திங்கள் அன்று மதியம் 2:43க்கு ஏவப்படும் என்று கூறப் பட்டுள்ளது.
சந்திரனின் மேற்பரப்பில் மெதுவாக, தரையிறங்க முயற்சிக்கும் முதல் இந்திய விண்கலப் பயணம் இது. இந்தப் பணி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு சந்திரனில் மெதுவான தரையிறக்கத்தை மேற்கொள்ளும் நான்காவது நாடாக இந்தியா மாறும்.
Chandrayaan 2 is ready to take a billion dreams to the Moon — now stronger than ever before! Join us for the launch on Monday — 22 July, 2019 — at 2:43 PM IST.
#Chandrayaan2 #GSLVMkIII #ISRO pic.twitter.com/4ybFcHNkq6— ISRO (@isro) July 18, 2019