சந்திரயான் – 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று, இந்திய விண்வெளி நிறுவனம் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட் என்று கூறியுள்ள அவர், சந்திரயான் 2 விண்கலம் புவிசுற்றுவட்டப் பாதையில் சென்றடைந்தது வரலாற்றில் முக்கியமான நாள் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பல்வேறு சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது என்றுகூறிய சிவன், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 2 கால் பதிக்கும் என்றும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது என்றும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக விஞ்ஞானிகள் பலர் உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது; வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று என்று கூறிய சிவன், அடுத்தடுத்து பல செயற்கைகோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம் என்றார் இந்த வெற்றி தந்த நம்பிக்கையுடன்!