ஜம்மு – காஷ்மீர் குறித்த தீர்மானம் நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை ஆதரவில் இன்று நிறைவேறியது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 351 உறுப்பினர்களும், எதிர்த்து 72 உறுப்பினர்களும் வாக்களிக்க, ஒருவர் நடுநிலை வகித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான விசேஷ அந்தஸ்தை அளிக்கும் சட்டப் பிரிவுகள் 370, 35 ஏ ஆகியவை திரும்பப் பெற்றுக் கொள்ளப் படுவதாக, நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அறிவித்தார். நேற்று மாநிலங்களவையில் இது நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில், இன்று விவாதத்துக்குப் பின் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டது.
காஷ்மீர் விஷேச அந்தஸ்து அளிக்கும் 370 & 35-A பிரிவுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவதற்கான அறிக்கை மற்றும் 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது
இவற்றுக்கு ஆதரவாக – 351, எதிர்ப்பு தெரிவித்து – 72, புறக்கணிப்பு – 1 என பதிவாகின. (மொத்தம் – 424)
அது போல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்-ஐ யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மக்களவையில் நிறைவேறியது. இதற்கு ஆதரவாக – 366, எதிர்த்து – 66, புறக்கணிப்பு – 1 என மொத்தம் -433 வாக்குகள் பதிவாயின.