ஒரு பெண்ணை அடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நின்றவனிடம் நீதிபதி கேட்டார், “பஸ்ஸில் டிக்கெட் வாங்கப் போன இந்தப் பெண்ணை ஏன் அடித்தாய்?” அதற்கு அவன் சொன்னான், “பஸ்ஸில் நிறையக் கூட்டமாக இருந்தது. இந்தப் பெண்ணிடம் கண்டக்டர் டிக்கெட் கொடுக்கப் பணம் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸைப் பெரிய பையில் வைத்துவிட்டாள்.”” “அதற்குப் பின் என்ன நடந்தது?” கேட்டார் நீதிபதி.” “திரும்ப வந்து கண்டக்டர் டிக்கெட் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸை பெரிய பையில் வைத்துவிட்டாள்” நீதிபதி எரிச்சலுடன் கேட்டார், “அதைத்தான் முன்பே சொல்லி விட்டாயே. திரும்பத் திரும்ப அதையே ஏன் சொல்கிறாய்?” குற்றம் சாட்டப்பட்டவன் புன்முறுவலோடு சொன்னான், “நான் சொல்வதைக் கேட்பதற்கே உங்களுக்கு இவ்வளவு எரிச்சல் வருகிறதே, இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்? அதுதான் அடித்தேன்
திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப….
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari