spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமலேசியாவில் இலங்கைத் தூதர் மீதான தாக்குதல்: 5 பேர் கைது

மலேசியாவில் இலங்கைத் தூதர் மீதான தாக்குதல்: 5 பேர் கைது

- Advertisement -

கொழும்பு:

மலேசியாவில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச கோலாலம்பூர் சென்றுள்ளார். அவரது வருகைக்கு அங்குள்ள தமிழர்களும், விடுதலைப்புலி ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மலேசியாவுக்கான இலங்கை தூதர் இப்ராகிம் அன்சார் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர் தினேஷ் குணவர்தனேவை சந்திப்பதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சிலர், ராஜபட்ச எதற்காக மலேசியா வந்தார் என்பதை கூறுமாறு வலியுறுத்தினர்.

ஆனால் இதற்கு இப்ராகிம் அன்சார் பதிலளிக்க மறுத்து விட்டார். உடனே அவரை விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் காவல் நிலையத்தையும் நாடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் வாயிலாக மலேசிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில், இலங்கை தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை செலாங்கர் சி.ஐ.டி. தலைவரான முகமது அட்னன் அப்துல்லா உறுதி செய்துள்ளார். ஆனால் அந்த 5 பேரின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

[embedyt] https://www.youtube.com/watch?v=yV0biEiPMbY[/embedyt]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe