நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. கோவில்களிலும்,வீடுகளிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. 108 திவ்ய வைணவ திருத்தலத்தில் முதன்மையாக உள்ளது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு தாயாருக்கு சாமரம்வீசியும், மௌத் ஆர்கனில் இசை இசைத்தும் கோவில் யானை வழிபாடு செய்ததை கண்டு பக்தர்கள் ஆச்சர்யமடைந்தனர்.