29-03-2023 9:49 AM
More
    Homeசற்றுமுன்காட்டிக்கொடுத்த ஸ்ரீ நரசிம்மர் ? திருடர்கள் கைது நகை மீட்பு

    To Read in other Indian Languages…

    காட்டிக்கொடுத்த ஸ்ரீ நரசிம்மர் ? திருடர்கள் கைது நகை மீட்பு

    பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கொண்ட கும்பலை பாவூர் சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கநகையை மீட்டனர்.
    கடந்த வாரங்களில் தென்காசி, ஊத்துமலை ,பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்ப்படுத்தியது
    பாவூர்சத்திரம் காவலர்கள் விழாக்காலம் என்பதால் இரவு பகல் பாராது வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் இந்நிலையில் கடந்த 28.12.16 அன்று காலையில் கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவில் கதவுகளை உடைத்து திருட முயற்சி நடந்து இதில் உஷாரான காவல்துறை தேடுதல் வேட்டையினை தீவிரப்படுதியுள்ளனர் சம்பவதன்று
    பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மேகநாதன் ,தலைமைக்காவலர்கள் அல்போன்ஸ் ,இம்மானுவேல்ஜெயசிங், ,சொரிமுத்து ,உதயசூரியன் ,தனிப்படைச் சேர்ந்த மோகன் உள்ளிட்ட போலீசார் பாவூர்சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காவலர்களைக் கண்டதும் கையில்இருந்த பையை வீசியுள்ளார் இதில் சந்தேகபப்பட்டு போலீசார் விசாரிக்கும்போது அவர் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த நடராஜன்(39) என்பது தெரியவந்தது அவனது பதில் முன்னுக்கு பின் முரணான இருக்கவே சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
    விசாரணையில் குறும்பலாப்பேரியைச் சேர்ந்த சேர்மத்துரை(23) மற்றும் மேலபட்டமுடையார்புரத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம்(39) ஆகியோர் கூட்டாக சேர்ந்து பாவூர்சத்திரம், கீழப்பாவூர், தென்காசி மற்றும் ஊத்துமலை பகுதிகளில் பகலில் நோட்டமிட்டு, இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து தங்கநகைகளை மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் திருட முயற்சி நடந்த அன்றே திருடர்கள் பிடிபட்டது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது ஸ்ரீ நரசிம்மர் உக்கிரமானவர் தவறு செய்பவர்ககளை உடனே தண்டிப்பார் என்ற சொல் நிரூபணமாகியுள்ளது என்பதே மக்கள் மத்தியில் பெரும் பேச்சாக உள்ளது
    திருடர்களைப் பிடித்த காவலர்களுக்கு வாழ்த்துகள்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 + seven =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...