அயோத்தி வழக்கில் சுன்னி வக்ஃப் போர்டு மற்றும் பிற முஸ்லீம் அமைப்புகளின் சார்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ராஜீவ் தவான், தாம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நேர்மையற்ற வகையில் நீக்கப் பட்டுள்ளதாக தமது ஃபேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளார்.
அயோத்தி வழக்கில் முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய ராஜீவ் தவான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அயோத்தி வழக்கில் சுன்னி வக்ஃப் வாரியம் மற்றும் பிற முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ராஜீவ் தவான் சமூக ஊடகங்களில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜீவ் தவான், தமது பேஸ்புக் கணக்கில் தெரிவித்துள்ள தகவலின் படி, அயோத்தி வழக்கில் இருந்து ஜாமியத் சார்பில் ஆஜர் ஆவதில் இருந்து தாம் நீக்கப் பட்டுள்ளதாகவும், எஜாஸ் மக்பூல் என்பவர் இருப்பதாகவும் பதிவிட்டார். “பதவி நீக்கம் செய்யப்படுவதை ஏற்று முறையான கடிதம் அனுப்பியுள்ளேன். மறு சீராய்வு விவகாரத்திலோ அல்லது இந்த வழக்கிலோ இனி நான் சம்பந்தப்படவில்லை, ”என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், அவர் மேலும் கூறுகையில், “உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் நான் வழக்கில் இருந்து நீக்கப்பட்டதாக திரு மதானி சுட்டிக்காட்டியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த முட்டாள்தனம். அவர் தனது வழக்கறிஞர் ஏ.ஓ.ஆர் எஜாஸ் மக்பூலுக்கு என்னை பணிநீக்கம் செய்யுமாறு அறிவுறுத்த உரிமை உண்டு. ஆனால் நீக்கியதற்கான காரணம் பொய்யானது. ” என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம், அயோத்தி மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யாத சுன்னி வக்ஃப் வாரியத்தின் முடிவைப் பற்றி பேசிய மூத்த வழக்கறிஞர், அவர்கள் இந்த முடிவை கடும் நெருக்கடிக்கு மத்தியில் எடுத்துள்ளதாகக் கூறினார்.
தனக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் இருப்பதால், அவர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளார் என்று கூறி, சுன்னி வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஜாபர் அஹ்மத் ஃபாரூகி மீது குற்றம் சாட்டினார்!