“போக்சோ சட்ட குற்றவாளிகளுக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை” என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.
நாடாளுமன்றம் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் சிரோஹி பகுதியில் நடந்த பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அப்போது அவர், பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் பாலியல் குற்றவாளிகள் கருணை மனு அளிக்க உரிமை கிடையாது.
கருணை மனுக்களை இனி நாடாளுமன்றமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பேசினார்.
முன்னதாக, கடந்த 2012ஆம் ஆண்டு தில்லியில் கூட்டு வன்புணர்வு மூலம் படுகொலை செய்யப் பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற வினய் சர்மாவின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவரும் நிராகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பேச்சு, இந்த விவகாரத்தில் பதில் அளிப்பது போல் உள்ளது.