சிறார் வதை வீடியோ பார்ப்பவர்கள் மற்றும் அப்லோட் செய்தவர்கள் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க சட்டத்தின்படி வழிவகை செய்யப்படும் என்றும் சமீபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு கொடுத்த சிறார் வதை வீடியோ பார்த்தவர்களின் பட்டியலின்படி நடவடிக்கை எடுக்க தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு முதல் கட்டமாக திருச்சியில் ஆபாச படம் பார்த்தவர்கள் விசாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் இன்று திருச்சியைச் சேர்ந்த அல்போன்ஸ் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இணையதளத்தில் சிறுமிகளின் ஆபாச படத்தை அப்லோட் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆபாச படம் பார்த்தவர்கள் மற்றும் அப்லோட் செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை தொடங்கி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அல்போன்ஸ் என்ற இந்த இளைஞரை அடுத்து இன்னும் எத்தனை பேர் கைது செய்யப்படுவார்களோ என அச்சத்தில் உள்ளனர்