சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது… தமிழக அரசு, மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சேத்துப்பட்டு ஆய்வக அலுவலகத்தில், மீன்வள மேற்பார்வையாளர் (தரம்-ஐஐ) பணியிடத்தை நிரப்புவதற்கு சென்னை மாவட்டத்திலுள்ள பொதுப்போட்டி பிரிவில் (முன்னுரிமை) அடிப்படையில் தகுதியுடைய நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, நீச்சல், வலை பின்னுதல் போன்றவையும் தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். ஊதிய விகிதம் 5200-20200 + தர ஊதியம் ரூ.2000/- ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வருகின்ற 06.04.2015 முதல் 10.04.2015 வரை தகுதியான உரிய சான்றுகளுடன், மீன்துறை இணை இயக்குநர், சென்னை மண்டல அலுவலகம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை-600 028 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்
Popular Categories