- இன்று காலை போலியோ சொட்டுமருந்து முகாம் தொடங்கியது!
- நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.
- காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கப்படும்.
- பேருந்து, ரயில், விமான நிலையங்களிலும் வழங்க ஏற்பாடு
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது; 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது!.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது!: தமிழகத்தில் 43,051 மையங்களில் 70.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பின்னர் அவர் இது குறித்துக் கூறிய போது, 16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது – என்றார்.