spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபூமி திருத்தி உண் : ஔவையாரின் ஆத்திசூடியை குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் பேச்சு!

பூமி திருத்தி உண் : ஔவையாரின் ஆத்திசூடியை குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் பேச்சு!

- Advertisement -
nirmalaseetharaman

பூமி திருத்தி உண் என்ற ஔவையாரின் ஆத்திசூடியை நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது குறிப்பிட்டார்.

நிர்மலா சீதாராமன், இன்றுதாக்கல் செய்து வரும் மத்திய பட்ஜெட் உரையில் ஔவையாரின் பாடலை சுட்டிக்காட்டி பேசினார். முன்னதாக, காஷ்மீரி கவிஞரின் கவிதையை வாசித்து பேசிய நிர்மலா, வேளாண் குறித்து பேசுகையில் “பூமி திருத்தி உண்” என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி பேசினார்.

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ப் பெண் கவிஞரான ஔவையாளர், வேளாண்மை பற்றி மூன்றே வார்த்தையில் தமது போதனையை வழங்கியதாக புகழ்ந்துரைத்தார். பூமி திருத்தி உண் என்ற ஆத்திசூடி பாடலுக்கு விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்பது பொருள். இதனை முக்கிய நோக்கமாக கொண்டு மோடி அரசு செயல்படுவதாகவும் நிர்மலா கூறினார்.

அவரது பட்ஜெட் உரையில் முக்கியமானவை…

  • 2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு
  • சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்
  • ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்
  • 6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்
  • விவசாயிகளுக்காக கிசான் ரயில் அறிமுகம் செய்யப்படும்
  • நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்
  • கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம்
  • விவசாயம் மற்றும் பாசன வசதிக்காக ரூபாய் 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • ஆயுஷ்மான் திட்டத்தின்படி 2000 மருத்துவமனைகள் அமைக்கப்படும்
  • 2021குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தியை செய்ய இலக்கு

*விவசாயிகளுக்கு “கிசான் கிரடிட் கார்டு” வழங்கப்படும்

  • 6 ஆண்டுகளில் கடன் GDP 52% இருந்து 48% குறைந்துள்ளது
  • 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்
  • சுமார் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து உயர்த்த பட்டுள்ளனர்
  • ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிமாற்றத்திற்கு தடை
  • கட்டமைப்பு மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி
    பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா
    *அனைத்து மாவட்டங்களிலும் மலிவு விலையில் மருந்து
  • ரூ.99, 300 கோடி கல்வித்துறைக்கு நிதி
    ஆன்லைனில் படித்து பட்டம் பெற அனுமதி
  • நாடு முழுவதும் டாக்டர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும்
  • புதிய கல்வி கொள்கை திட்டம் வருது: நிதி அமைச்சர்
  • கல்வித்துறையில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
  • 2025ல் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe