குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெய்வீக பணியாற்றி வந்த கஜரத்னம் என்ற பத்மனாபன் தனது 84 வது வயதில் இன்று மறைந்தது.
கஜரத்னம் மறைந்தது குறித்து தேவஸ்வம் போர்டு தலைவர் கே.பி.,மோகன்தாஸ் கூறியபோது…
பத்மனாபன் என அழைக்கப்பட்டு வந்த கஜராஜரத்தினம் கடந்த 1954 ம் ஆண்டில் ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த சகோதரர்களால் அன்பளிப்பாக கோயிலுக்கு வழங்கப்பட்டது. குருவாயூர் கோயிலின் தெய்வத்தின் பிம்பமான திடாம்புவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமந்த பெருமை கொண்டது கஜரத்னம் பத்மநாபன்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சூர் பூரம் உள்பட மாநிலத்தின் பல்வேறு கோயில் திருவிழாக்களில் அதிகம் விருப்பத்துடன் பங்கேற்றுள்ளது. கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அதிக கட்டணமாக ரூ.2.25 லட்சம் வரையில் பெறப்பட்ட யானை இதுதான் தன்னுடைய அமைதியான, கீழ்படிதல் தன்மை மற்றும் நீண்ட தும்பிக்கை , கூர்மையான தந்தம் போன்றவை பக்தர்களால் விரும்பப்பட்டன.
திருவிழாக்களின் போது இதுவரை எந்த சம்பாவிதங்களையும் இந்த யானை உருவாக்கியதில்லை. இதனாலேயே இந்த யானைக்கு பிரத்யேக பேஸ்புக் பக்கம் உருவாக்கி மக்கள் பாசம் காட்டினர்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 2.10க்கு தனது 84 வது வயதில் யானை பத்மநாபன் மரணித்தது.
தரையில் தொடுகின்ற நீண்ட தும்பிக்கை தந்தம் மற்றும் நன்கு செதுக்கப்பட்ட வடிவம் போன்ற கவர்ச்சிகரமான அம்சங்களால் ‘கஜரத்னம்’ என்ற பட்டத்தைப் பெற்றது இந்த யானை. பத்மநாபனின் மரணத்தோடு, குருவாயூர் கோயில் தேவஸ்வம் போர்டு நிர்வகிக்கும் யானை சரணாலயத்தில் எண்ணிக்கை 47 ஆக குறைந்துள்ளது
2004 ஆம் ஆண்டில் பாலக்காடு மாவட்டத்தில் பிரபலமான நென்மாரா-வெல்லாங்கி வேலா விழாவில் பங்கேற்றதற்காக 2014 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக ரூ.2.22 லட்சம் சம்பளம் கிடைத்தது என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த யானை குருவாயூர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள அனக்கோட்டா (யானை சரணாலயம்) இல் வைக்கப்பட்டது. தேவஸ்வம் போர்டு நிர்வகிக்கும் இந்த சரணாலயம் ஒவ்வொரு ஆண்டும் கோயில் நகரத்திற்கு வருகை தரும் பல பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.