- கொரோனாவை விட கொடூரமான முறையற்ற மருத்துவம்!
- கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரிப்பு!
- ஆந்திர மாநிலம் சித்தூரில் ஊமத்தை மருந்து குடித்த 7 பேர் கவலைக்கிடம்!
- உரிய மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சித்தூர் காவல் துறை அறிவிப்பு!
ஊமத்தங்காய் சாறு குடித்து ஏழு பேருக்கு அவதி. நாட்டு சாராயம் குடித்தாலும் ஊமத்தங்காய் மிக்சர் குடித்தாலும் கரோனா வைரஸ் வராமல் இருக்கும் என்று பிரச்சாரம் நடந்ததால் சித்தூர் மாவட்டத்தில் 7 பேர் உயிருக்கு ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்!
சித்தூர் மாவட்டம் பைரெட்டிபல்லி மண்டலம் எ கொத்தூரு கிராமத்தில் செவ்வாயன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல்நிலை கோளாருக்கு ஆளானர்கள். கரோனா வைரஸ் தீர்வுக்காக ஊமத்தங்காய் மிக்ஸர் குடித்ததால் இந்த சம்பவம் நேர்ந்தது.
செய்தி அறிந்த அதிகாரிகள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்கள் ! எதையெதையோ சாப்பிட்டால் கரோனா வைரஸ் வராமல் இருக்கும் என்று கூறி பலவிதமான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. சாராயம் குடித்தால் கரோனா வராது என்றெல்லாம் தவறான மெசேஜ்கள் சுற்றி வருகின்றன. இவற்றை எல்லாம் நம்பி மோசம் போய்விடாதீர்கள் மக்களே!