காவலுக்கு வைத்திருந்த பேரிகார்டுடன் காவலர்கள் கண்முன்னே இளைஞர் மோதும் சண்டைக் காட்சி:
தேனி,அல்லிநகரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியில் ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞரை அழைத்து கொரோனா தொற்று அபாயம் உள்ள சூழலில் வெளியில் தேவையில்லாமல் சுற்ற வேண்டாம் உங்களுக்காக நாங்கள் தன்னலம் பாராது பணி செய்து கொண்டிருக்கிறோம் என்று அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை அழைத்து அறிவுரை கூறியதன் ஆத்திரத்தால் அங்கு தடுப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் அந்த இளைஞர் தன் தலையால் முட்டி அராஜக செயலினை காவலர்கள் முன்னே அரங்கேற்றிய காட்சி…
இவரைப் போன்றவர்களால், தன்னலம் பாராது பொது மக்களுக்காக பணி செய்து கொண்டிருக்கின்ற காவல் துறைக்கு “காவலர்களின் அத்துமீறல்” என்ற செய்திகள் மட்டுமே பரிசாகவும், வெகுமதியாகவும் உலா வருகின்றன.