
உலகின் அதிகாரம் மிக்க இடமாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மளிகை செயல்படுகிறது. தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடிக்கு பெயர் போனவர். எந்த செயலிலும் அதிரடியாக செயல்படுபவர்!
அமெரிக்காவின் தேசிய அமைதி தினம் இரண்டு நாட்களுக்கு முன்னர் எளிமையான முறையில் கொண்டாடபட்டது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. அதில் இந்து மதத்தின் தெய்வமான காக்கும் கடவுள் ஸ்ரீமந்நாராயணனின் புகழ் பாடும் வேதங்கள் முக்கியமாக ஓதப் பட்டன. காக்கும் கடவுள் நாராயணன் என ஹிந்து மத புராணங்கள் கூறுவதை நன்கு உணர்ந்த அதிபர் டிரம்பின் குடும்பத்தினரின் விருப்பப்படி இதற்கு ஏற்பாடு செய்யபட்டதாம்.