spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கிராமசபைக் கூட்டம்னாங்க... மனுக்கள வாங்கினோம்னாங்க.. என்ன ஆச்சு?: ராஜேந்திர பாலாஜி கேள்வி!

கிராமசபைக் கூட்டம்னாங்க… மனுக்கள வாங்கினோம்னாங்க.. என்ன ஆச்சு?: ராஜேந்திர பாலாஜி கேள்வி!

- Advertisement -
ktrajendrabalaji
ktrajendrabalaji

திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது?… என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

குடி மராமத்து பணிகள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் திமுக சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தி பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது என்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டி மற்றும் செவலூர் புதுக்கோட்டையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் மூலம் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாய சங்கங்களின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டப் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, தமிழக முதல்வர் உத்தரவிற்கு இணங்க தமிழகம் முழுவதிலும் உள்ள கண்மாய்கள், வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதை நாட்டு மக்கள் வரவேற்கின்றார்கள். விருதுநகர் மாவட்டம் முழுவதும் 54 கண்மாய்கள் குடி மாராமத்து பணிகள் செய்யப்படுகின்றன.

ktrajendrabalaji
ktrajendrabalaji

இதில் அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மதுக்கடைகளை அரசு விரும்பி திறக்கவில்லை எந்த பாதிப்பும் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே திறந்துள்ளோம். மதுக் கடைகளை குறைக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார்.

அரசின் அறிவிப்புகள் மக்களை நன்மைக்காக மட்டுமே இருக்கும். .நாங்கள் ஏசி ரூமில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர்கள் அல்ல திமுகவிற்கு 6லட்சம் மனு வந்ததாகவும் அதில் 5லட்சம் மனுவிற்கு நடவடிக்கை எடு்த்துவிட்டோம் என்றும் மீதமுள்ள ஒருலட்சம் மனு சிறு குறு தொழில் சம்பந்தப்பட்டது என்றும் தலைமை செயலாளரிடம் திமுகவினர் மனுக்களை கொடுத்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த மனுவில் அரிசி, பருப்பு, துணிவகைகள் கேட்டுதான் அனைத்து மனுக்களும் உள்ளன. திமுகவினர் வாங்கிய மனுக்களுக்கு திமுக அறக்கட்டளை மூலமே நிவாரணம் வழங்கலாம். பொய்களை சொல்வதற்கு ரூ.350 கோடியில் வடநாட்டில் இருந்து பிரசாந்த் கிஷோரை கூட்டிவந்து விளம்பரம் செய்யும் அந்த ரூபாயில் ஒவ்வொறு மாவட்டத்திற்கும் 5கோடி ரூபாய் நிவாரணம் திமுக வழங்கலாம்.

ஏப்ரல், மே, ஜீன் மூன்று மாதங்களுக்கும் ரேசன் கடையில் அரிசி பருப்பு எண்ணையை எடப்பாடியார் அரசு ஏழை மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகின்றது. முதலமைச்சரின் சிறப்பு முகாம் மூலம 10லட்சம் மனுக்கள் வரப்பெற்று அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்த மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

எம்பி தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின், உதயாநிதி ஸ்டாலி்ன் முன்னாள் திமுக அமைச்சர்கள் கிராமம் கிராமமாக சென்று கிராம சபை கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கினார். . வாறுகால் கட்டி தருவோம் ரோடு போட்டு தருவோம் முதியோர் பென்சன் வாங்கி தருவோம் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி மனுக்கள் வாங்கினர்.

அந்த மனுக்களை திமுகவினர் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அந்த மனு எங்கே சென்றது என்று யாருக்கும் தெரியாது. இந்த தொகுதி எம்பி இந்த பகுதியில் ஓட்டும் கேட்டு வரவில்லை. நன்றி கூறவு்ம் வரவில்லை.

பொதுமக்களுக்கு பிரச்சனை என்றால் தெருவிற்கு ஓடிவருவது என்னை போன்ற அதிமுக தொண்டர்கள்தான். விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் தாமிரபரணி குடிநீரை கொண்டு வந்துள்ளோம் என்று கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கண்ணன், சப் கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe