ஹாங்காங்கை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனது ஐந்தம்ச திட்டம் மூலமாக முயன்று வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் ஹாங்காங்கில் ஏற்கனவே இருந்த பத்திரிகையாளர் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பத்திரிகையாளர் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது. இதுகுறித்து சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.
பிரிட்டீஷ் காலனியாக இருக்கும் ஹாங்காங் சீன வசம் செல்வதால் ஹாங்காங் பத்திரிகையாளர்களது கருத்து சுதந்திரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசாங்கத்தின்மீது வீண் பழி சுமத்துவோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
சீன அரசின் இந்த நடவடிக்கையை ஹாங்காங் மனித உரிமை ஆணையம் கண்டித்துள்ளது. இது உச்சகட்ட மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளது. 98 சதவீத ஹாங்காங் பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்கள் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளனர்.
பிரிட்டன் இட்ட ஒப்பந்தத்தின்படி பிரிட்டீஷ் காலனியாக உள்ள ஹாங்காங்கில் ஒரு நாடு இரு சட்டம் என்ற முறை 2047ம் ஆண்டு வரை அமலில் இருக்க வேண்டும்.
ஆனால் சீனா அதனை 2020ம் ஆண்டிலேயே முடிக்கப் பார்க்கிறது. சர்வதேச பத்திரிகையாளர் சங்கமான ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பும் சீன அரசின் இந்த செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஹாங்காங் வெளியிறவுத்துறை இந்த சட்டத்தை எதிர்த்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பத்திரிகையாளர்கள் கூடும் இடமாக விளங்குகிறது ஹாங்காங்.
இது தற்போது சீன அரசால் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது உலக நாடுகளில் கவனத்தைப் பெற்றுள்ளது.