கொரோனா தொற்றால், ஒரே மாதத்தில் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தமிழகத்தில் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு தமிழகத்தில் 70977 ஆக உள்ளது.
இன்று 32,543 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது! கொரோனா வைரஸால், தமிழகத்தில் இன்று 3509 பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். சென்னையில் மட்டும் இன்று 1834 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மக்கள் நெருக்கம் அதிகம் இல்லாத மாவட்டங்களில் திடீரென அதிகரிக்கும் தொற்று கவலை தரும் வகையில் உள்ளது. 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பாக…. மதுரை 203, செங்கல்பட்டு 191, திருவள்ளூர் 170, வேலூர் 168, ராமநாதபுரம் 140, காஞ்சிபுரம் 98, தேனி 68, சேலம் 59, கன்னியாகுமரி 47, விழுப்புரம் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
குறிப்பாக தமிழக அரசு இடையில் திறந்துவிட்ட டாஸ்மாக் மூலமாகவே அதிக நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று தமிழகத்தில் 3509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியானது. முதன்முறையாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 70,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,834 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 45 பேர் உயிர் இழந்துள்ளனர் அதேநேரம் இன்று ஒரே நாளில் 2,236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,650ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 900ஐ தாண்டியது. இதுவரை 911 பேர் தமிழகத்தில் குழுவுக்கு உயிரிழந்துள்ளனர்