கிழக்கு கோதாவரி மாவட்டம் அல்லவரம் மண்டலத்திலுள்ள தும்மலபல்லி கிராமத்தைச் சேர்ந்த பிரதீப், நாகஜோதி தம்பதிகளின் ஒரு மாத ஆண் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சைக்காக பிரபல ஹீரோ மகேஷ்பாபு உதவி செய்து நிஜ வாழ்க்கையிலும் ரியல் ஹீரோவாக ஆனார்.
மே மாதம் 31-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா பிறந்த தினத்தையொட்டி விஜயவாடாவில் உள்ள ஆந்திரா மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தார்கள்.
அந்த தம்பதிகளுக்கு இதுவே முதல் பிரசவம். முதலில் ஆரோக்கியமாக தென்பட்டாலும் சில நாட்களிலேயே குழந்தையின் உடல் நலத்தில் மாற்றங்கள் வந்ததை கவனித்து அமலாபுரத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பித்தார்கள். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அரிதான இதய நோயால் அவன் சிரமப்படுகிறான் என்பதை கவனித்து விரைவில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பெற்றோருக்கு தெரிவித்தார்கள். மேற்கொண்டு மேலான மருத்துவ சிகிச்சைக்காக விஜயவாடா அல்லது ஹைதராபாத் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும் என்றும் செலவு அதிகமாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய பிரதீப் அமலாபுரத்திலுள்ள தன் நண்பரின் மூலம் ஹீரோ மகேஷ்பாபு டிரஸ்ட் வழியாக குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்று அறிந்துகொண்டு விஜயவாடாவில் உள்ள ஆந்திரா மருத்துவமனை ஹார்ட் அண்ட் ப்ரைன் இன்ஸ்டிடியூட் மருத்துவர்களை சென்ற மாதம் 30ஆம் தேதி அணுகினார்.
ஆபரேஷனுக்குப் பின் இரண்டு நாட்களுக்கு பிறகு ஜூன் இரண்டாம் தேதி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினார்கள். அறுவை சிகிச்சையின் பிறகு குழந்தையின் உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக ஆனது. பிபி குறைவானதால் இதயம் அடித்துக் கொள்வதில் வேறுபாடு காணப்பட்டதால் மருத்துவர்கள் ஐசியுவில் சிகிச்சை அளித்தார்கள்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு குழந்தை ஆரோக்கியம் மேம்பட்டு நல்ல முன்னேற்றம் இருந்ததால் சொந்த கிராமத்திற்கு அனுப்பினார்கள். தற்போது குழந்தை நல்ல உடல் நலம் தேறி வருகிறான் என்று ப்ரதீப் தெரிவித்தார். ஹீரோ மகேஷ்பாபுவுக்கு நன்றி தெரிவித்தார்.