பண்டரிநாதன் கோவிலில், நடப்பாண்டு ஆஷாட ஏகாதசி விழா, ரத்து செய்யப்பட்டுள்ளது. கரூர் பண்டரிநாதன் கோவிலில், கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கும், ஆஷாட ஏகாதசி விழா, ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டு வரும் ஜூலை, 1ல் விழா நடக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டு ஆஷாட ஏகாதசி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, கோவில் டிரஸ்டி குணசேகரன் தெரிவித்துள்ளார்.