spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?'கறுப்பர் கூட்டம்' பெயரில் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் இஸ்லாமியர்! மதமோதலை தூண்டும் பிரிவினைவாதிகள்!

‘கறுப்பர் கூட்டம்’ பெயரில் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் இஸ்லாமியர்! மதமோதலை தூண்டும் பிரிவினைவாதிகள்!

- Advertisement -
karupparkoottam
karupparkoottam

கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்திரித்து, ‘யு டியூப்’பில் ‘கறுப்பர் கூட்டம்’ என்ற பெயரில் பதிவிட்ட இஸ்லாமியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து இயக்கங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் மாநில செயலர், சுந்தரவடிவேலன் நாகப்பட்டினம் எஸ்.பி.,க்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக அளித்த புகாரில் ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யு – டியூப் சேனலில் ஆசிப் முகமது என்பவர் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்திரித்து அருவருக்கத்தக்க வகையிலும், ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையிலும் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இது பதிவிடப்பட்டுள்ளது. ஆசிப் முகமது மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த சேனலை முடக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் செயலாளர் இ.ஆறுமுகக்கனி காவல்துறை ஆணையாளரிடம் அளித்துள்ள புகாரில்,

மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டுதல் , ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டி , மத அமைதியை குலைத்தல், கொச்சையான வார்த்தைகளை காட்சிப்படுத்தி வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடுதல், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் பேசி அதை காட்சிப்படுத்துதல்,அதன்மூலம் குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தல், உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தல், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அவதூறு பரப்புதல் ,அவதூறாக கொச்சையாக காட்சிப்படுத்துதல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுதல் ஆகிய குற்றங்களுக்காக “கறுப்பர் கூட்டம்” என்கிற சமூக வலைதள chennel களை கையாள்பவர்கள், உரிமையாளர், கொச்சையான வீடியோக்களில் பேசுபவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறோம்

Link : https://www.facebook.com/karupparkoottam/

https://www.youtube.com/c/KarupparKoottam

“கறுப்பர் கூட்டம்” என்கிற you tube channel மற்றும் Facebook page கள் சில சமூக விரோதிகளால் தொடங்கப்பட்டு இந்துக்களின் மனதை , உணர்வுகளை புண்படுத்தி அதன்மூலம் இந்துக்களை தூண்டிவிடும் நோக்கத்தில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

அதில் உள்ள வீடியோக்கள் ,இந்து மதத்தைப் பற்றியும், அவதூறான கருத்துக்களும் ,கொச்சையான காட்சிப்படுத்துதல்களும், வசனங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

தற்போது கூட கந்தர்சஷ்டி கவசத்தை கொச்சையாக விமர்சித்து இந்த “கறுப்பர் கூட்டம் என்கிற you tube chennel ல் வெளியிடப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது .

https://www.facebook.com/100003780336838/posts/2050677688401556/

மேற்கண்ட வீடியோ, வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் ,அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து வழிபாடுகளை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டும் நோக்கத்திலும் , மத அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான காட்சிப்படுத்தல் மூலம் வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் வசனங்களை காட்சிப்படுத்தி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட கறுப்பர் கூட்டம்” என்கிற சமூக வலைதள chennel களை கையாள்பவர்கள், உரிமையாளர், கொச்சையான வீடியோக்களில் பேசுபவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505,188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காவல்துறை, இந்த விஷயத்திலாவது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். … – என்று கோரியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பலரும் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி, புகார்களை அளித்துள்ளனர்.

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் இயங்கும் நாத்திகக் கும்பல்களில் பொதுவாக மத நம்பிக்கையுள்ள இஸ்லாமியர் எவரும் ஈடுபடுவதில்லை. கோவையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இயங்கிய இஸ்லாமியர் பாரூக், இஸ்லாத்தையே விமர்சித்த போது அவர் கொலை செய்யப் பட்டார்.

ஆனால், கறுப்பர் கூட்டத்தில் தாங்களே இது போல் வீடியோக்களை விமர்சித்து வெளியிடாமல், இஸ்லாமியர் ஒருவர் மூலம் இந்து மதத்தை விமர்சித்து வெளியிடுவது, குறிப்பாக பிரிவினைவாதிகளின் கை இதில் இருப்பதையும், மதமோதலைத் தூண்டும் விதத்திலும் திட்டமிட்டு செய்யப்படுவதையுமே காட்டுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவுனர் ஜெயப்பிரகாஷ் இதுகுறித்து நேரடியாக தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்றும் இப்போது வைரலாகி வருகிறது.

கறுப்பர் கூட்டத்துக்கு எதிரான கருத்துகள் டிவிட்டரிலும் அதிகம் காணப்படுகின்றன….

சும்மா பதிவு போட்டால் பத்தாது இந்தாங்க குரூப் லிங்க்.. ரிப்போர்ட் அடிங்க. ஒரு நூறு பேரு அடிச்சாலும் போதுமானது. https://www.facebook.com/groups/737642993353161/?ref=share

நோயினால் தாக்கப்படுகிற உடலின் ஒவ்வொரு பகுதியையும் சொல்லி அவைகளை காக்க வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்கிறது கந்த சஷ்டி கவசம்.

இந்த அவயங்களின் பெயரை அதுவும் கடவுள்முன் உச்சரித்தாலே ஒருவனுக்கு பாலுணர்வை தூண்டுகிறது என்று சொன்னால்…..(1/1)

அவன் அவனுடைய அம்மாவை பார்க்கும்போது இதே எண்ணத்துடன்தான் பார்ப்பான். இவனுடைய அம்மா இவனுக்கு சூ….து கழுவி விட்டிருப்பார்கள். இந்த எண்ணத்துடன்தானே அதை ரசித்திருப்பான். (2/2)

தன் உடன் பிறந்த அக்கா, தங்கை, பக்கத்தில் உள்ள பெண்கள், பழகுகிற பெண்கள் என்று எல்லோரையும் இவன் அப்படித்தானே பார்த்திருப்பான். இவனுடைய அக்காவோ, தங்கையோ அவர்களின் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது இவன் அதை பார்த்தான் என்றால் இந்த எண்ணத்துடன்தானே ரசிப்பான். (3/3

ச்சை….எவ்வளவு குரூர எண்ணம் படைத்தவர்கள் இந்த ஈவெரா திராவிட கும்பல்…. இவனிடம் உஷாராய் இருக்க வேண்டும். யார் தெரியுமா? இவனுடைய அம்மா, அக்கா, தங்கை, பழகும் பெண்கள். இவன் இவர்கள்மேல் எந்நேரமும் பாயலாம். (4/4)

அதுசரி. இவனுடைய பொண்டாட்டிக்கு இந்த அவயங்களில் நோய் வந்தால் டாக்டரிடம் எப்படி சொல்வான்? ஒருபக்கம் பால் உணர்வுபற்றிய பாடங்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று போராடுகிறார்கள் இவர்கள். மறுபக்கம் இந்த அவயங்களைவெளிப்படையா சொல்லலாமா என்று கேட்கிறார்கள். என்னடா உங்க பிரச்சினை? (5/5)
என்று பல்வேறு எதிர்ப்புக் கருத்துகள் சமூகத் தளங்களில் உலாவருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe