January 17, 2025, 6:41 AM
24 C
Chennai

தமிழக- இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

tnசென்னை: தமிழகம் மற்றும் இலங்கையின் மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை வரும் 24ஆம் தேதி சென்னையில் நடத்தத் தயாராக இருப்பதாக தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளது. தமிழக் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முயற்சிகளை மேற்கொண்டார். அதன் காரணமாக சென்னையிலும், கொழும்பிலும் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடம், தேதி போன்றவற்றை, இலங்கை மற்றும் தமிழக அரசிடம் பேசி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிர்ணயித்து வந்தது. இந்நிலையில் 3-ம்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை தேனாம்பேட்டை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மார்ச் 5-ந் தேதி நடத்துவதாக தமிழக தரப்பும், மார்ச் 11-ந் தேதி என்று இலங்கை அரசும் அறிவித்தது. இரு தினங்களுமே இருதரப்புக்கும் சரிவராத நிலையில், தற்போதுன் மார்ச் 24ம் தேதி பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்கு, தமிழக அரசு நேற்று எழுதிய கடிதத்தில், வரும் 24 ஆம் தேதி சென்னையில் இருநாட்டு மீனவர்களின் 3வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த தயாராக இருப்பதாக கடிதம் எழுதி உள்ளது.

ALSO READ:  மதமாற்ற பாதிரி மீது புகார் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!