Home சற்றுமுன் கார் விபத்து: பெற்றோருடன் சிக்கிய கைக்குழந்தை.. மீட்ட பொதுமக்கள்!

கார் விபத்து: பெற்றோருடன் சிக்கிய கைக்குழந்தை.. மீட்ட பொதுமக்கள்!

மணப்பாறை அருகே விபத்துக்குள்ளான காரிலிருந்து 7 மாத கைக்குழந்தை மற்றும் இளம் தம்பதியினரை பொதுமக்கள் மீட்ட பரபரப்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த வருண்தாஸ் தனது மனைவி ஜான்சியின் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு வருண்தாஸ் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முக்கன்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிந்துள்ளது.

காரின் உள்ளே வருண்தாஸ், ஜான்ஸி ஆகியோர் 7 மாத குழந்தையுடன் சிக்கித் தவித்தனர். இதனைப் பார்த்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், காரின் கண்ணாடியை உடைத்து 7 மாத கைக்குழந்தை மற்றும் இளம் தம்பதியை பத்திரமாக மீட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version