லெபனான் நாட்டில் பயங்கர சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
மேற்குஆசிய நாடான லெபானின் தலைநகர் பெய்ரூட் நகரில் பயங்கர சத்தத்துடன் பெரும் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில், அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது.
கட்டடங்கள் பல சேதமடைந்தன. குண்டு வெடித்த நிகழ்வு வீடியோவாக ஏ.என்.ஐ. டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் இப்போது வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று நடந்துள்ள மிகப்பெரும் குண்டு வெடிப்பு அந்நாட்டையே அதிர வைத்துள்ளது.