― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகிரைம் நியூஸ்வரதட்சணைக்காக மனைவியின் ஆபாசப் படத்தை வெளியிட்ட கணவன்! மனமுடைந்த மனைவி எடுத்த முடிவு!

வரதட்சணைக்காக மனைவியின் ஆபாசப் படத்தை வெளியிட்ட கணவன்! மனமுடைந்த மனைவி எடுத்த முடிவு!

- Advertisement -

வரதட்சணை கொடுக்காத மனைவியின் ஆபாச புகைப்படத்தை கணவர் பேஸ்புக்கில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தவர் விஜயபாரதி(32). இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

பின்னர், அயனாவரத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நீண்ட நாட்களாகப் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி அன்று திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் திவ்யாவிடம் ரூ. 10 லட்சம் வரதட்சணை தருமாறு கேட்டு கொடுமை படுத்தியுள்ளார் விஜயபாரதி. மேலும் வரதட்சணை கொடுக்காவிட்டால் ஆபாசபடத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் கோபமுற்ற திவ்யா கடந்த ஜூலை மாதம் தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் அயனாவாரத்திலுள்ள மகளிர் காவல்நிலையத்தில் விஜயபாரதி மீது புகார் செய்தார்.

இது சம்பந்தமாக விஜயபாரதிக்கும் திவ்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விஜய்பாரதி அவரது ஆபாசபுகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த திவ்யா தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version