ராமநாதபுரத்திலும் தவறுதலாக எலி மருந்தை சாப்பிட்ட சிறுமிகள் உயிருக்கு போராடி வரும் சம்பவம் நடந்துள்ளது
ராமநாதபுரம் சாயல்குடி அருகே வசித்து வரும் சிறுமிகள் 5 பேர் தின்பண்டம் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்து ஒவ்வொரு சிறுமியாக மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுமிகளை பரிசோதித்ததில் அவர்கள் எலி மருந்து சாப்பிட்டது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமிகள் 5 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெற்றோர்களின் அலட்சியத்தால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என்பது நினைவுகூரத்தக்கது.