spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து சேவை செய்த மருத்துவர் மறைவு!

ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து சேவை செய்த மருத்துவர் மறைவு!

- Advertisement -
Screenshot_2020_0816_102902

வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த திருவேங்கடம் வீரராகவன் நேற்று மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 70.

1973 ஆம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த இவர் ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த நிலையில் பிறகு அதை ஐந்து ரூபாயாக மாற்றினார். ஆனால் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து தங்கள் பிழைப்பை கேள்விக்குறியாக்குவதாக இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்

ஆனால் இதுகுறித்து கூறிய மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் தான் இலவசமாக பெற்ற மருத்துவத்தை இலவசமாக மக்களுக்கு கொடுப்பதே இதற்கான காரணம் என்று கூறினார்.

Screenshot_2020_0816_102837

கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவர் திருவேங்கடம் வீரராகவனின் மருத்துவ சேவையை பாராட்டி சிறந்த மனிதருக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.

காலை 9 மணியிலிருந்து 12 மணிவரை எருக்கஞ்சேரியிலும், மாலை 7. 30 மணியிலிருந்து 9 மணிவரை வியாசர்பாடியில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த இவருக்கு வியாசர்பாடியில் இலவசமாக மருத்துவமனை ஒன்றை கட்ட வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவு என்று கூறுகின்றனர் அவரது குடும்பத்தினர். மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் மறைவு அவரால் பயன் பெற்ற ஏழை எளிய மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe