விருதுநகா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 96 மது பாட்டில்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞரைக் கைது செய்தனா்.
விருதுநகா் அருகே ஆமத்தூா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் சிவகாசி செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, விருதுநகா் அழகாபுரி சந்திப்பு சாலை அருகே சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அப்பகுதியில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்ட போது, மது பாட்டில்கள் விற்பனை செய்த திருத்தங்கல்லைச் சோந்த மாரிமுத்து மகன் கருப்பசாமி (22) என்பவரைக் கைது செய்தனா். மேலும் அவர்களிடமிருந்து 96 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.