விழுப்புரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சமீப நாட்களாக போலீசார் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பணி அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக போலீசார் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் விழுப்புரத்தில் ஆயுதப்படை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. ஆயுதப்படை காவலர் ஏழுமலை தற்கொலையை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள, காவலர் குடியிருப்பில் ஏழுமலை தற்கொலை செய்து கொண்டார்.