கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சமயமூர்த்தி அனைத்து மாவட்ட இணை இயக்குனர்கள் மற்றும் கருவூல அலுவலர்களுக்கு சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது, வங்கி கணக்குகளில் ஓய்வுதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கி கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணம் பரிவர்த்தனை நடைபெறாவிட்டால் அதுகுறித்த, தகவல்களை சம்பந்தப்பட்ட வங்கியானது கருவூலத்துறை தெரிவிக்கவேண்டும்.
மேலும், ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழ் அளிக்கவோ கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதிக்காகவே ஓய்வு ஊதியம் வழங்குவது நிறுத்தப்படவேண்டும்.
ஓய்வு ஊதியம் சான்றிதழை சமர்ப்பிக்க விட்டாலோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்யாவிட்டாலும் ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் பரிவர்த்தனை திரும்ப பெற வேண்டும்.
சேமிப்பு உள்ளிட்ட இதர அம்சங்கள் தவிர்த்து ஓய்வூதிய தொகையை மட்டுமே திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.