- மனிதர்களோடு சேர்த்து கார் எரிப்பு. விஜயவாடாவில் கோர சம்பவம்.
- விஜயவாடா நகரம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
மனிதர்களோடு சேர்த்து காரை எரித்த சம்பவம் விஜயவாடா நகரம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றுபேரை காரிலேயே இருத்தி தீவைத்துக் கொளுத்தியதில் இருவர் உயிரோடு போராடி வருகிறார்கள்.
விஜயவாடா நகரின் நட்ட நடுவில் கோர சம்பவம் நேர்ந்துள்ளது. மனிதர்களோடு சேர்த்து காரை எரித்த சம்பவம் நகரத்தில் தீவிர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைப் பூட்டிவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததில் மூவர் நெருப்பில் எரிந்து தீவிர காயங்களுக்கானார்கள்.
நிலச் செட்டில்மென்ட் விவகாரத்தில் ஆத்திரமடைந்த ஒருவர், மூவரை காரிலேயே வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். குற்றவாளியை வேணுகோபால் ரெட்டி என்று அடையாளம் கண்டுள்ளனர்.
குற்றவாளி வேணுகோபால் ரெட்டி மற்ற மூவர் கிருஷ்ணா ரெட்டி, கங்காதர், நாகமல்லியோடு சேர்ந்து லேண்ட் விஷயமாக காரில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்தி. விவாதத்தின் நடுவில் திடீரென்று கீழே இறங்கிய வேணுகோபால் ரெட்டி மூவரையும் உள்ளே வைத்து காரைப் பூட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சித்தார். திடீரென்று நெருப்பு பற்றி எரிந்தது. கார் முழுவதுமாக எரிந்து போனது. இந்த சம்பவத்தில் கிருஷ்ணா ரெட்டி கங்காதரன் நாகமல்லி மூவரும் தீக் காயத்தால் தீவிரமாக பாதிக்கப் பட்டனர். அவர்களில் நாகமல்லி, கிருஷ்ணா ரெட்டியின் நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளது.
செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உதவிச் செயல்களில் ஈடுபட்டனர். தீயணைப்பு இயந்திரம் வந்து தீயை அணைத்தது.
விஜயவாடா டிசிபி ஹர்ஷவர்தன் சம்பவ இடத்தை பரிசீலித்தார். கார் பற்றி எரியும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.