பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் மனைவி மற்றும் தனது 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்தச் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் நல அதிகாரிகள் அங்கு நடந்தவற்றை கேட்டறிந்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை சிறுமியிடம் விசாரணை நடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.