சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உகாதித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்து: ’’தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் எமது புத்தாண்டு திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடும் “உகாதித்திருநாள்” இந்த ஆண்டில் மார்ச் திங்கள் 21ஆம் நாள் எழுச்சியோடு கொண்டாடப்படுவது அறிந்து மகிழ்கிறேன். தமிழகம் வந்தாரை வரவேற்று வாழவைக்கும் மனவளம் கொண்ட மாநிலம். இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்க்கும், இங்கு எப்போதும், யாதொரு இடர்ப்பாடும் எவராலும் நேர்ந்ததில்லை; “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் மனப்பான்மை புறநானூற்றுப் பாடலில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடம் இன்றும் இயல்பாக மிளிர்வதையே இது காட்டுகிறது. 2001-2006 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மறுக்கப்பட்ட உகாதித் திருநாளுக்கான அரசு விடுமுறையை 2006க்குப் பின் மீண்டும் நடைமுறைப்படுத்தியது தி.மு.க. ஆட்சி! தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு, கன்னடமொழிகள் பயில விரும்பும் குழந்தைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித்தந்தது தி.மு.க. ஆட்சி! தனி வல்லுநர் குழுக்களை அமைத்து, தரமான பாடநூல்களை அவர்களுக்காகத் தயாரித்தும், அவற்றைத் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் அச்சிட்டும் வழங்கிட வகை செய்தது தி.மு.க. ஆட்சி! பெங்களூரு மாநகரில் 18 ஆண்டுகாலம் திறக்கப்படாமல் மூடிக்கிடந்த அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை 9.8.2009 அன்று திறந்து வைக்கப்படவும், அதனைத் தொடர்ந்து 13.8.2009 அன்று சென்னை மாநகரில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறந்து வைக்கப்படவும் ஆவன செய்து தமிழக, கர்நாடக மாநில மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதில் தனிப்பாத அமைத்தது தி.மு.க. ஆட்சி! அதேபோல சென்னைக்கு வந்து சேரும் கிருஷ்ணா நீர் தமிழக, ஆந்திர மாநிலங்களுக் கிடையிலான நல்லுறவை வலுப்படுத்திட உதவுகிறது. கழக அரசு காலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சட்டமன்றப் பேரவை -தலைமைச் செயலக வளாகக் கட்டடத் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக, கேரள, புதுவை மாநில முதலமைச்சர்களையும் அழைத்து, அண்டை மாநிலங்களுக் கிடையே நல்லிணக்க மனப்பான்மைகளை வளர்ப்பதில் புதிய பரிமாணத்தைப் படைத்தது தி.மு.க. ஆட்சி! தி.மு.க. கடைப்பிடித்து வரும் இத்தகைய உறவு மணப்பான்மையும், உணர்வும் தென்னக மாநிலங்களிடையே மேலும் மேலும் வளம்பெற வேண்டும்; வலுப்பெறவும் வேண்டும். இந்த விழைவோடு கன்னட, தெலுங்கு மொழிகள் பேசும் மக்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது உளமார்ந்த “உகாதித் திருநாள்” நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்
Less than 1 min.Read
கருணாநிதி உகாதித் திருநாள் வாழ்த்து
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை
மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்
நெல்லை
உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!
நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உரத்த சிந்தனை
இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?
பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,
ஆன்மிகச் செய்திகள்
செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!
செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை
மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்
நெல்லை
உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!
நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உரத்த சிந்தனை
இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?
பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,
ஆன்மிகச் செய்திகள்
செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!
செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து
அரசியல்
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
விளையாட்டு
Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!
ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.