காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப்பகுதியில் மோதலை கட்டவிழ்த்து விடுவதற்காகவும் அமைதியை சீர்குலைக்கவும் பாகிஸ்தான் ஆளில்லா வான்வழி வாகனங்களை நிறுத்த திட்டமிட்டு உள்ளது.
இதற்காக பாகிஸ்தான் சீனாவிலிருந்து காய் ஹாங் -4 (சிஎச் -4) யுஏவியை அதிக எண்ணிக்கையில் வாங்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிகேடியர் முகமது ஜாபர் இக்பால் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவத்தின் 10 உறுப்பினர்கள் கொண்ட குழு இதற்காக சீனாவுக்கு சென்று கொள்முதல் செயல்முறையை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காய் ஹாங் -4 இன் முதல் தொழிற்சாலை சோதனைக்காக இக்பால் முன்னதாக 2019 டிசம்பரில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார்.
யுஏவி ஏற்கனவே ஈராக் இராணுவம் மற்றும் ராயல் ஜோர்டானிய விமானப்படை உள்ளிட்ட இராணுவப் படைகளில் சேவையில் உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் இராணுவ சிறப்பு சேவைக் குழு (எஸ்.எஸ்.ஜி) கமாண்டோக்கள் தலிபானி மற்றும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் ரகசிய இடங்களில் ஆயுதப் பயிற்சி அளித்து வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன.
இந்த பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரோந்து செல்லும் ராணுவம் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.