― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்நேத்து கட்சில சேர்ந்தாரு… இன்னிக்கு ‘சப்பை’ வழக்கு! அண்ணாமல நல்லா வருவாரு…!

நேத்து கட்சில சேர்ந்தாரு… இன்னிக்கு ‘சப்பை’ வழக்கு! அண்ணாமல நல்லா வருவாரு…!

- Advertisement -
annamalai-ips-joining-bjp

நேற்றுதான் கட்சியில் சேர்ந்தார்… இன்று அதற்குள் அவர் மீது வழக்குப்பதிவு என்றால் ஆளும் கட்சிக்கு மிகப் பெரும் சவாலாக திகழப் போகிறார் என்பதற்கான முன்னோட்டம்தான் இது என்கின்றனர் சமூக தளங்களில்! யாரைப்பற்றி என்றால் அது முன்னாள் ஐபிஎஸ் கே அண்ணாமலை குறித்துத்தான்

அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தபோது தமிழகத்திலுள்ள திமுக சிந்தனையில் வளர்ந்த ஊடகவியலாளர்கள் உள்பட சமூக ஊடகங்களில் செயல்படும் திக., இடதுசாரி சிந்தனையாளர்கள் பலரும் பெரும் விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக திமுகவுக்கு உரிய அரசியல் கலையான தனிநபர் கீழ்த்தரமான தாக்குதல்களை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டனர் 

jbnadda-annamalai

அண்ணாமலையின் அரசியல் பிரவேசம் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது இந்நிலையில் ஆளும் கட்சியினரும் தற்போது பாஜகவை எதிர்த்தரப்பு ஆகவே பார்த்து வருகின்றனர்.

அதிமுகவினர் வருங்காலத்தில் தே.ஜ. கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாஜக மற்றும் இந்து இயக்கங்களின் ஆதரவாளர்கள் இந்து இயக்கத்தினர் மீது பல்வேறு இடங்களில் வழக்குகளை பதிவு செய்து போலீசார் மூலமாக நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் கொடுத்து வருகின்றனர் 

கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சுந்தரவள்ளி உள்ளிட்ட சிலரும் திமுக பிரமுகர்களும் இதுவரை தமிழக அரசியலில் கண்டிராத அளவுக்கு மிகக் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்தும் கூட அது குறித்து கொஞ்சமும் சட்டை  செய்யாத தமிழக காவல்துறையினர் ஒன்றும் பெறாத சாதாரண விஷயங்களுக்கெல்லாம் பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களைக் குறிபார்த்து வழக்குப் போடுவது மிகப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுகவுடனான கூட்டணியிலும் பெருமளவில் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. இதை எதிர்பார்த்து தான் அதிமுக தலைமையும் இவ்வாறு வழக்குகளை பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருப்பதாக பேசப்படுகிறது 

அதன் ஒரு வெளிப்பாடாக தான் இப்போது பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உட்பட  ஐந்து பேர்  மீது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது என்று கூறுகின்றனர் பாஜகவினர் 

இரு தினங்களுக்கு முன் தில்லிக்குச் சென்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குறித்து கீழ்த்தரமான வீடியோக்களை பதிவு செய்து திக., சார்பு சமூக ஊடகவியலாளர்கள் வெளியிட்டு வந்தனர். காரணம் வளர்ச்சி குறித்த அச்சம்.

அதேபோன்ற அச்ச உணர்வு இப்போது ஆளும் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், தனிநபர் இடைவெளியை பின்பற்றவில்லை உட்பட 5 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது எடப்பாடியின் தலைமையில் இயங்கும் தமிழக காவல் துறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version