தமிழகத்தில் இன்று 5,996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,09,238ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் இன்று 5,752 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,49,682 ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,050ஆக அதிகரித்துள்ளது
சென்னையில் இன்று 1296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,31,869ஆக உயர்ந்துள்ளது
இன்று ஒரே நாளில் 75,103 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 44,20,697 இன்று சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னையை அடுத்து உள்ள மாவட்டங்களான திருவள்ளூர் மாவட்டத்தில் 298 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 296 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 194 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்