கர்நாடகாவில் வீடு இன்றி கோவில் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணை தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு சடலத்தை பாலியல் பலாத்காரம் செய்த நபர் சிசிடீவி மூலம் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஹாசான் மாவட்டத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சியில், ஆகஸ்ட் 26 அன்று நள்ளிரவில் வெள்ளை சட்டை ப்ளூ ஜீன் அணிந்த ஒரு நபர் கையில் சிமிண்ட் கல்லுடன் வருகிறார்.
பெங்களூர் – மங்களூர் சாலையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவில் அருகே வீடு இல்லாத ஒரு ஆதரவற்ற பெண் தூங்கி கொண்டிருக்கிறார். 12.03 மணிக்கு அவரது தலையில் சிமிண்ட் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். அதன் பின் 12.40 வரை அந்த பெண் உயிருக்கு போராடி இறந்துள்ளார்.
அதனை கவனித்த அந்த நபர் 12.58 மணிக்கு மீண்டும் வந்து அந்த பெண் இறந்து விட்டாரா என பார்த்து விட்டு தலையில் இருந்த கல்லை எடுத்து விட்டு அந்த பெண்ணை நிறுத்தி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் முழுவதும் அந்த சிசிடீவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து குற்றவாளியை தேடும் பணி நடந்து வருகிறது.