― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகிரைம் நியூஸ்திருமணமாகி ஒரே மாதம்.. மனைவி 'அதற்கு' மறுத்ததால் கொலை செய்த கணவன்!

திருமணமாகி ஒரே மாதம்.. மனைவி ‘அதற்கு’ மறுத்ததால் கொலை செய்த கணவன்!

- Advertisement -

திருமணம் முடிந்து ஒன்றரை மாதத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருக்கும் பிச்சாண்டார் கோவில் ஊராட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் லால்குடி பகுதியை சேர்ந்த ஹெலன் ராணி ( 26). என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து தம்பதியினர் வாழவந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியில் சென்ற ஹெலன் ராணி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கணவர் மற்றும் உறவினர்கள் எல்லாம் ராணியை தேடி கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றபோது அங்கு தேங்கியிருந்த குட்டை நீரின் கரையோரம் உடலில் துணியில்லாமல் உயிரற்ற சடலமாக ஹெலன் ராணி கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போய் இருப்பதையும் புரிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நகைகள் பறிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டுனர். மோப்ப நாய்கள் உதவியுடன் குற்றவாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஹெலன் ராணியின் கணவரான அருள்ராஜ் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வர அவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது ஹெலன் ராணியை அருள்ராஜ் தான் கொள்ளிடம் ஆற்றுக்கு அழைத்து சென்றார் என்பதும், அங்கு இருவரிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை நீரில் மூழ்கடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

திருமணமாகி இதுவரை தாம்பத்திய உறவுக்கு வராத மனைவியை ஆத்திரத்தில் கணவர் கொலை செய்துள்ளார்.

சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நகைகளை பறித்து, மனைவியின் ஆடைகளை கலைத்து பாலியல் வன்கொடுமை செய்தது போல் செய்து நிர்வணமாக ஆற்றில் யாரோ கொலை செய்தது போல் செய்துள்ளார்.

போலீசாரின் தீவிர விசாரணையில் கணவனே மனைவியை கொடூரமாக கொலை செய்து நாடகமாடியது அம்பலாமாகி உள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version