தமிழகத்தில் 17 வயது சிறுமி குளிப்பதை இளைஞர் வீடியோ எடுத்ததால், அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே தான் வருகின்றன. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பைரப்பல்லி பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் 17 வயது மகள் அவர் வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் அருகில் இருந்த வீட்டு மாடியில் இருந்து, சிறுமி குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்ததுடன், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் தனுஷ்குமாரின் மீது சிறுமியின் தந்தை முருகேசன் காவல்துறையில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவரை சிறையில் அடைத்த காவல்துறையினர், அந்த செல்போனையும் கைப்பற்றினார்கள்.