மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய அருண்பிரகாஷ் என்ற இளைஞரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பசும்பொன் தேசிய கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் செந்தில்ராஜ்தேவர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பசும்பொன் தேசிய கழகத்தின் நிர்வாகிகள் சாலை மறியல் செய்தனர்..
அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீஸார், சம்பவம் எங்கே நடந்தது என்று கேட்டு தவிர்க்கப் பார்த்தனர். பின்னர் தகுந்த நடவடிக்கைக்கு உறுதி கூறி கலைந்து போகச் செய்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பசும்பொன் தேசிய கழகத்தின் மாநில இளைஞரணித் தலைவர் செந்தில்ராஜ் தேவர் பேசியபோது… (வீடியோவில்…)
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை