பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தை ஹேக்கர் ஒருவர் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in என்ற ட்விட்டர் பக்கத்தை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். நீல நிற டிக் பெற்றுள்ள இந்த ட்விட்டர் கணக்கு இன்று அதிகாலை ஜான் விக் ([email protected]) என்ற நபரால் ஹேக் செய்யப்பட்டது.
கொரோனா தடுப்புக்காக பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு , கிரிப்டோ கரன்சியை நன்கொடையாக வழங்குங்கள் என்று ஹேக் செய்யப்பட்ட பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது . அந்த ட்வீட்கள் அதன் பின் நீக்கப்பட்டன.
பிரதமர் மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்தின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை ட்விட்டர் உறுதி செய்துள்ளது. மேலும் இனி இதுபோல் நிகழாது என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.