தமிழகத்தில் இன்று 5870 பேருக்கு Covid-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டது இன்று தமிழகத்தில் 61 பேர் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், நோய் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று 965 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது இதையடுத்து சென்னையில் இதுவரை covid-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,685 ஆக அதிகரித்துள்ளது
Covid-19 நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 7,748 ஆக அதிகரித்துள்ளது.
Covid-19 வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5,859 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். இதையடுத்து நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,98,366 ஆக உயர்ந்துள்ளது
இதன்மூலம் நோய்தொற்று குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: