பி.கே.மூக்கையாதேவரின் 41வது வது குருபூஜையை முன்னிட்டு மதுரையில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பி.கே.மூக்கையாதேவர் 41வது வது குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன்செல்லப்பா, சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கி.மாணிக்கம், அலங்காநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா உள்ளிட்ட அதிமுக.,வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை