Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் யார் எதை தானம் செய்ய வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

யார் எதை தானம் செய்ய வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காய்கறியை தானம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்று ஒரு மகான் ஒருவனுக்கு உபதேசம் செய்தார்.

அந்த உபதேசத்தை தவறாமல் கடைபிடித்து வந்தால் இறந்த பிறகு அவன் ஒரு ராஜ பரம்பரையில் பிறந்தான். முன் ஜென்மத்தில் தான் செய்த தானம் அவன் நினைவிற்கு வந்தது. அதனால் பழையபடியே காய்கறி தானம் செய்வதை தொடர்ந்தான். இறந்த பிறகு ஒரு பிச்சைக்காரனாக பிறந்தான். இதற்கு என்ன காரணம் என்று அவன் யோசித்து முதலில் அவனுக்கு உபதேசம் செய்த மகானை தேடி சென்றான்.

அரசனாக பிறப்பதற்கு முன் அவன் பரம ஏழையாக இருந்ததால் நாள்தோறும் தானம் செய்த காய்கறியே போதுமானதாக இருந்தது. புண்ணியத்தை தேடிக் கொடுத்தது. அரசனாக இருக்கும்போது அவனிடம் மிகுந்த செல்வம் இருந்தது. ஆனால் அவன் தானம் செய்த சிறிய காய்களினால் அவனுக்கு விசேஷமான புண்ணியத்தைப் பெற முடியவில்லை. எனவே ஓரளவிற்கு புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள ஒருவன் விரும்பினால் அவனவன் தகுதிக்கு ஏற்றவாறு தானம் செய்ய வேண்டும்.

இது ஒவ்வொருவரும் ஒருவருக்கு கொடுக்க கூடிய பொருளாதார நிலையை சார்ந்து இருக்கிறது என்பதனை உணர்த்துகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version