15 வயது சிறுமியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து மற்ற நண்பர்கள் அருகில் அமர்ந்து அதனை ரசித்து வீடியோ பதிவாக எடுத்து மற்ற நண்பர்களுக்கும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் தன் பெற்றோருடன் வசித்து வரும் பாதிக்கப்பட்ட சிறுமி(15) அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியின் தாய் வலிப்பு நோயாளி என்பதால் செப்டம்பர் 3ம் தேதி அவர் தந்தை மற்றும் தாய் மருத்துவ சிகிச்சைக்காக அலிகாரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அன்று இரவு சிறுமி மற்றும் சகோதரர்கள் வீட்டில் அவரவர் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த ஊரை சேர்ந்த ஷேஜாத் (22) மற்றும் அவரது நண்பர்கள் அஃப்ரோஸ், அஸ்ரப், வாகீத், சர்தாஜ், ஷானு மற்றும் செஹ்ரோஜ் ஆகியோர் மொட்டை மாடி வழியாக சிறுமியின் அறைக்குள் நுழைந்துள்ளனர்.
பிறகு அந்த பெண்ணை ஷேஜாத் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்ய மற்றவர்கள் இதனை அருகில் உட்கார்ந்து ரசித்துள்ளனர். மேலும் அதனை வீடியோவாக எடுத்து மற்ற நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளனர்.
இது குறித்து அந்த பெண் தன் பெற்றோருக்கு போன் செய்து கூறியுள்ளார். உடனே ஊரில் இருந்து வந்த பெற்றோர் சிறுமியை அழைத்து கொண்டு காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அனைவரையும் கைது செய்து அவர்கள் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.