காஞ்சிபுரம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், புத்தளி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவருடன் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று முட்புதருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுநீர் அழுது கொண்டே தனது தந்தையிடம் ரஞ்சித்தின் சில்மிஷத்தை பற்றி சொல்ல சிறுமியின் தந்தை தயக்கம் இன்றி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளானது உறுதியாக காமக்கொடூரன் ரஞ்சித்தை கைது செய்து சிறையில் தள்ளி இருக்கிறது காவல்துறை.
சிறுமிகளை கண்காணிப்பதில் பெற்றோர் அதிக விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி இருக்கின்றனர்.