spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விஷயம் குறித்து பரிசீலியுங்கள்: ஓய்வி சுப்பாரெட்டி!

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விஷயம் குறித்து பரிசீலியுங்கள்: ஓய்வி சுப்பாரெட்டி!

- Advertisement -
yv-subbareddy-met-nirmala-sitharaman
yv-subbareddy-met-nirmala-sitharaman

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விஷயம் குறித்து பரிசீலியுங்கள் என்று ஒய் வி சுப்பாரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமலை கோவிலின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட ஸ்பெஷல் பாதுகாப்பு பிரிவிற்கு பாக்கியுள்ள 23.78 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஓய்வி சுப்பாரெட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விண்ணப்பம் செய்தார்.

செவ்வாய்க்கிழமை அன்று தில்லியில் அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இது குறித்து விண்ணப்பப் பத்திரம் அளித்தார். ஜிஎஸ்டி ரத்து செய்வதால் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு மேலும் பொருளாதார பலம் கிடைத்து பல சமுதாய, கல்வி, தர்ம நிகழ்ச்சிகளை இன்னும் அதிகமாக நடத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ஓய்வி சுப்பாரெட்டி கோரிக்கை வைத்தார்.

திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியின் பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கைகள் சமர்ப்பித்த ரூபாய் 500 ரூபாய் 1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அல்லது வேறு எந்த வங்கியிலும் டெபாசிட் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒய்வி சுப்பாரெட்டி அமைச்சரைக் கோரினார்.

மத்திய அரசாங்கம் 2016 நவம்பர் எட்டாம் தேதி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தது முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பணமில்லாத கொடுக்கல் வாங்கல்களை உற்சாகப்படுத்துவது குறித்து பல ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றார். ஆனால் பக்தர்கள் அதன்பின் கூட ஶ்ரீவாரி உண்டியல் மூலம் ரத்து செய்த நோட்டுகளை காணிக்கையாக சமர்ப்பித்து வருகிறார்கள்.

பக்தர்களின் மன உணர்வோடு இணைந்துள்ள அம்சம் ஆனதால் பக்தர்கள் இந்த நோட்டுகளை உண்டியலில் சமர்ப்பிக்காமல் தடுக்கும் ஏற்பாடுகள் செய்ய முடியாமல் போனது என்று அவர் விவரித்தார். பல வங்கிகளில் லேவாதேவி நடத்திவரும் டிடிடி உண்டியல் மூலம் கிடைக்கும் காணிக்கைகளுக்கு அதிகாரப் பூர்வமாக ரெக்கார்டுகள் வைத்துள்ளது என்று அமைச்சரிடம் விவரித்தார்.

டிடிடி யிடம் சேர்ந்துள்ள நிலுவையில் உள்ள இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதன் மூலம் வரும் ஆதாயத்தால் இன்னும் பல தார்மிக சேவை நிகழ்ச்சிகள் நிர்வகிக்கலாம் என்று சுப்பாரெட்டி கூறினார். பழைய நோட்டுகளை மாற்றுவது குறித்து 2017 ல் இருந்து டிடிடி பலமுறை மத்திய நிதி அமைச்சகத் துறைக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கடிதங்கள் எழுதி விண்ணப்பித்தாலும் அனுகூலமான பதில்கள் வரவில்லை என்று அவர் கூறினார்.

பக்தர்களின் மன உணர்வுகளோடு தொடர்புள்ள இந்த அம்சம் குறித்து அனுகூலமான முடிவு எடுத்து டிடிடி யிடம் நிலுவையில் உள்ள பழைய நோட்டுகளை ரிசர்வ் பேங்க் களிலோ அல்லது பிற வங்கிகளிலோ டெபாசிட் செய்வதற்கு தகுந்த உத்தரவுகளை கொடுக்க வேண்டும் என்று அவர் மத்திய நிதி அமைச்சரிடம் கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe