நெல்லூர் அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கை மீது இரு தாய்மார்கள்.
நெல்லூர் அரசாங்க மருத்துவமனையில் பிரசவம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பிரிவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. பிரைவேட் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் பிரசவத்திற்காக அதிக எண்ணிக்கையில் பெண்கள் இங்கு வந்து சேருகிறார்கள்.
ஆனால் கர்ப்பிணிகளுக்கும் குழந்தை பெற்றவர் களுக்கும் 250 படுக்கைகளும் குழந்தைகளுக்கு 70 படுக்கைகளும் மட்டுமே இங்கு உள்ளன. பிரசவம் செய்த இரு தாய்களையும் அவர்களின் பிறந்த குழந்தை களையும் ஒரே படுக்கையில் படுக்க வைக்கிறார்கள்.
இங்கு படுக்கை குறைபாடு மிக அதிகமாக உள்ளது. ஒரே படுக்கையில் அவர்கள் அப்போதைய பிறந்த குழந்தைகளோடு படுப்பது கஷ்டமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
அதுவும் இந்த கொரோனா நேரத்தில் இவ்வாறு படுத்திருப்பதன் ஆபத்தை அங்கு வந்து சேர்ந்திருக்கும் தாய்மார்கள் உணர்ந்து மிகவும் வருத்தத்தில் உள்ளார்கள். வருத்தமளிக்கும் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.